Tags
@amas32, @dtwdy, @ikrishs, @isai_, @i_vr, @Jsrigovind, @Kaarthikarul, @maestrosworld, @Manivel, @maya_twit, @Naanillai, @pgramss, @Pramadth, @Qatarseenu, @ragavanpandian, @rajabalanm, @rexarul, @rmdeva, @r_inba, @sagittarian82, @StallionStorms, @usharanims, @vrsaran
நேற்றைய துணுக்கில் இயந்திர இசை ஆதிக்கத்தை கேட்டிருப்பீர்கள், இன்று நிஜ ஒலி வாத்திய பிரம்மாண்டம். பிரம்மாண்டம் என்றால் எப்படி, எல்லா வாத்தியங்களையும் ஒரு சேர அலற விடுவதா.. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி கொடுப்பதா, இல்லை, அந்த பாடலுக்கு அந்த சூழலுக்கு அந்த உணர்வுக்கு ஏற்றார்போல் எத்துனை வாத்தியக்கருவிகள் வாசித்தாலும் ஒவ்வொன்றும் தன் தனித்துவம் கெடாமல் இசைந்து, பாடகரின் குரலுக்கு மொழிக்கு இடைவிட்டு, தேவையான பாதிப்பை கேட்ப்பர்களுக்கு கொடுக்கவேண்டும்.. இதற்க்கு மத்தியில் ஒரு திரைப்பாடலுக்கான, திரையிசைக்கான அழகியலையும் விட்டு விலகாமல் இருக்க வேண்டும். இது எல்லாவற்றையும் செய்துவிட்டு அங்கேங்கே சின்ன சின்ன சுவாரசியங்களையும் பொதித்து வைப்பது தான் ராஜா.
இன்றைய பாடல் சமீபகாலங்களில் ஒரு பெரும் சாதனைப்பாடல் தான். மொத்தமாக அந்த திரைத்தொகுப்பே சாதனை தான். முதல் சீசனில் ரெக்ஸ் மாஸ்டரின் புதிர் தொடரில் இந்த திரைப்படத்தில் இருந்து இன்னொரு பாடல் வந்துள்ளது, கொடுத்துள்ள இடையிசைகளை (ஆமாம் இரண்டு இடையிசைகள் உள்ளன இன்று) கவனியுங்கள்.
இந்த பாடலே காலமாற்றங்களை பற்றியது, கடந்த காலத்தின் பெருமையும் பின் வந்த வீழ்ச்சியும் அந்த வருத்தமும் அந்த பெருமையை மீட்கும் போராட்ட உணர்வுமாக பல்வேறு உணர்ச்சிகளை ஒரே பாடலில் வடித்து கொண்டுவருவது தான் இந்த பாடலின் களம். இந்த கால உணர்வு மாற்றங்களை ஒரு ஐந்து நிமிட இசைக்கோர்ப்பில் கொண்டு வந்து கொட்டிவிடுகிறார்.
உங்களுக்கு காதும் மனதும் சரியில்லாவிட்டால் இதை ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லை, சும்மா கையில் வந்ததை எழுதி வாசிக்க வைத்துவிட்டார் என்று சொல்லிக்கொள்ளலாம்.. சொல்லிக்குங்க.. எங்களுக்கு இன்னும் நிறைய பாட்டு கேக்கவேண்டி இருக்கு.. 🙂
இதுக்கு மேல எதுவும் எழுதினால் புதிருக்கு வழியில்லாமல், பாடலையே சொல்லிவிட வேண்டியிருக்கும்.. மிச்சத்தை மக்களே பின்னூட்டத்தில் வழங்குமாறு கேட்டுக்கொண்டு.. நன்றி! வணக்கம்! 🙂
Lifeline Clue : Please select the text between the quotes below to see the hidden text clue
This highly successful Historical movie which had a mega star casting, won lot of national and regional awards
Answer: தமிழ் – ஆதி முதற்காலம் – பழசி ராஜா (Tamil – Aadhi Mudhal – Pazhasi Raaja)
மலையாளம் – ஆதி உஷஸ்ஸந்த்ய – பழசி ராஜா (Malayalam – Aadhi Ushasandhya – Kerala Varma Pazhassi Raaja)
vrsaran said:
பாடல் “ஆதிமுதற்காலம் பூத்ததிங்கே”. படம் பழஸி ராஜா (2009). மது பாலகிருஷ்ணன் & ராகுல் நம்பியார் பாடிய பாடல் !
app_engine said:
ஆதி உஷஸ் சந்த்ய பூத்ததிவிடெ 🙂
Vijayanandh Sridhar (@Pramadth) said:
movie:PALHASSI RAJA song:AADHI MUDHAL…………..
Jayashree Govindarajan said:
ஆதி முதற் காலம் பூத்ததிங்கே.. (பழசி ராஜா)
@Jsrigovind
Jayashree Govindarajan said:
Ilayaraja speech on how he composed this music..
irquiz365 said:
நன்றி நன்றி 🙂
manivel said:
பழசிராஜா – ஆதிமுதற் காதல்
irquiz365 said:
Correct 🙂
தேவா.. said:
Wov…..aathi from pazhasiraja. When you close your eyes and listen , it will take you somewhere. Such a powerful song.
irquiz365 said:
Its a very powerful song
நீலிரசிகன் (@ragavanpandian) said:
ஆதி முதற்காலம் – பழசிராஜா – மது பாலகிருஷ்ணன்,ராகுல் நம்பியார்
amas32 said:
ஆதி முதற் காலம் பூத்தது இங்கே, படம் பழசி ராஜா :-)) சூப்பர் பாடல் 🙂
amas32
irquiz365 said:
சூப்பர்ரோ சூப்பர் 🙂
Usharani M (@usharanims) said:
ஆதிமுதற்காலம் பூத்ததிங்கே… – மது பாலகிருஷ்ணன், ராகுல் நம்பியார், சந்திரசேகர் & விஜிதா – பழசிராஜா
ரிஷி(@i_vr) said:
”ஆதி முதல் காலம் பூத்ததிங்கே..” மது பாலகிருஷ்ணன் & ராகுல் நம்பியார் குரல்களில் “பழசிராஜா” படப்பாடல்.
கடந்தகால வரலாற்றையும் நிகழ்கால போரட்டத்தின் வலிமையையும் எதிர்கால நம்பிக்கையையும் இசையில் வார்த்து அதற்கு இணையான பாடல் வரிகள் கிடைக்க வில்லை என பொங்கிய ராசாவின் வார்த்தைகளில் – “ஆதி உஷ சந்திய பூத்தது இவிடே..” (march fast வரிகள்)
ராசா போராடி கொண்டுதான் இருக்கிறார் நல்ல பாடல் வரிகள் கிடைக்க…ஆனாலும் சில சமயங்களில்….
மாஸ்டர் “அம்பும் கொம்பும்” பாடல் தந்தபோது எழுதியது:
என்னுடைய ப்ரிய ஆல்பமிது…இப்பாடலின் இசையைப் பற்றி விஜய் எழுதுவார்…. நான் இன்று முழுவதும் CLல் கேட்டு விட்டு வருகிறேன்… 🙂
ரிஷி(@i_vr) said:
அது ” அனுராக எனாயித்து”வானாலும். “அம்பும் கொம்பும்” பாடலானாலும் இசைக்கு மொழி,மாநில பேதமில்லையெனினும் மண்வாசனையை மனம் மகிழ கொண்டு வரும் ராசாதான் உண்மையில் “பழசிராசா” !!
அதிலும் வரலாற்று சிறப்புமிக்க படமெனில் ராசாவின் ஜீவயிசை பாய்ந்து ஓடுமல்லவா…பாரதி,காமராஜ்,rudrama devi….அடுக்கி கொண்டே போகலாம்.
இதோ நள்ளிரவு வந்துவிட்டது…ஆனாலும் காலையில் தொடங்கிய CL இன்னும் ஓடிக்கொண்டேதானிருக்கு….”அகிலமெல்லாம்தான் (இசை) அமைத்தவன் யாரோ”!!
irquiz365 said:
என்சாய் 🙂
irquiz365 said:
ரிஷி, இந்த இசையை நான் என்னுடன் பணிபுரியும் ஒரு கேரளாவைச் சேர்ந்த நண்பருக்கு போட்டுக்காட்டியபோது அவரால் கண்டுபுடிக்க முடியலை. பின்னர் நான் விடையை சொன்ன போது, இந்தப் பாட்டா, வரிகளுக்கும் இசைக்கும் சம்பந்தமில்லையே. எவ்வளவு powerfulஆ இருக்கு இசை, வரிகள் சாதாரணமா இருக்கேன்னு சொன்னாரு. இதைச் சொன்னதுக்குதான் உங்க பட உலகமே ராஜாவைத் திட்டுச்சுன்னு சொன்னேன். 😦 இப்படித்தான் இருக்கு இப்போ 😦
Srinivasan said:
பாடல் : ஆதி முதல்
படம் : பழசி ராஜா
என்ன பாசு…..ரெண்டு சரணத்தையும் மாத்தி கொடுத்தால் நாங்க என்ன ஏமாந்தா போய்டுவோம்….
என்ன ஒரு ஜீவனுள்ள பாடல் .இது …
இந்தப்பாடல் மலையாளத்தில் எழுதும் போது ராஜா ஐயாவிற்கும் இந்தப்பாடலாசிரியருக்கும் லடாயாம்…
இயக்குனர் சமரசம் செய்து வேலையை முடித்ததாக ஐயாவே ஒரு மேடையில் பேசி இருக்கார் .
@Qatarseenu
irquiz365 said:
லடாயெல்லாம் இல்லை. ரிஷி வீடியோ போட்டிருக்கார் பாருங்க. ராஜா இதை சொன்ன பின்புதான் மலையாள்த் திரையுலகம் அவருக்கு எதிர்ப்பு தெரிவிச்சது. முதலில் ராஜா சொன்னதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியலை. 🙂
Vijay (@maestrosworld) said:
ஆதி உஷஸ் சந்தய பூத்ததிவிடே (ஆதி முதற்காலம் பூத்ததிங்கே) – பழசி ராஜா
ஐந்து பாடல்களும் ஐந்து முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள், வைடூர்யங்கள், பவழங்கள் என்று அடுக்கிகொண்டே போகலாம். இவ்வெல்லாவற்றிற்கும் மேல் மகுடம் சூட்டினாற்போல் இந்த ஸ்லோகம்.
மாதங்கானன மப்ஜ வாச ரமணி
கோவிந்த மாத்யம் குரும்
வியாசம் பாணினி
கற்கநாரத காணாத்தாத்யான்
முநீந்த்ரான் புதான்
துர்காம் சாபி
மிருதங்க ஷைல நிலையாம்
ஸ்ரீ போர்கலீப்
இஷ்டதாம்
பக்த்யா நித்தியம் உபாஸ்மாஹே
சபதி நகுர்வந்த்வமி
மங்களம்
மங்களம்
சமீப காலங்களில் என்னை மிகவும் உலுக்கிய பாடல்கள். தாளத்திற்கும் தாள ஒலிக்கும் மிகவும் முக்கியத்துவம் தந்த பாடல்கள். இந்த பாடல்களின் சாரமும், ஒலியும், லயமும் நாம் சுவாசிக்கும் மூச்சு காற்றிலிருந்து உருவானவை போல் அவ்வளவு சுத்தமாக இருக்கும். பரிபூரணத்துவம் அமைந்தவை.
காவியத்தலைவன் – இளையராஜா
irquiz365 said:
முதலில் தமிழில் இருந்ததால் யாரு கமெண்ட்னே புரியலை. இப்போ தமிழிலும் கலக்கத் தொடங்கிட்டீங்க வாழ்த்துக்கள்.
ராஜா said:
பழசி ராஜா படத்திலிருந்து ஆதி முதற் காலம் பூத்ததிங்கே பாடல்.
சொன்ன மாதிரியே ஈஸியா குடுத்ததுக்கு ரொம்ப நன்றி :).
@rajabalanm
irquiz365 said:
கொடுத்த வாக்கை காப்பத்தில் எனக்கு நிகர் நானே – ன்னு நீங்கதானே ட்விட்டர்ல சொன்னீக :-))))
Sholavandan (@Naanillai) said:
Aadhi Mudhal from Pazhassi raja
Rex Arul said:
“ஆதி முதல்” from பழசிராஜா
irquiz365 said:
ஜூப்பர் மாஸ்டர் 🙂
@sagittarian82 said:
ஆதியூஷஸ் சந்த்ய பூத்ததிவடே
Isai said:
Aadhiushassandhya – Pazhassi Raja
@isai_
@ikrishs said:
Aadhi muthal – Palasi raja
dtwdy said:
Adhiysa sandya – Pazhassi Raja
Ganapathy Ram (@pgramss) said:
aadhi mudhal – pazhassi raaja movie song
this was a great album and BGM as well , manushan full force la adi pinni pedal eduthu irupar thalaivar B)
irquiz365 said:
Yes sir. This song is a great sample of that powerful music. I am sad that Keralites did not appreciate this much 😦
Kaarthik Arul said:
Ah! I thought I answered this. Was just checking the comments of previous comments and found I’ve not answered yet.
Aadhi mudhal/ Aadhi usha sandhya from Pazhassi Raja sung by Madhu Balakrishnan
irquiz365 said:
Good that you noticed 🙂
Arun Rajendran said:
Song: Aadhi mudhal
Film: Pazhassi Raja
Wow wonderful selection. After seeing this film, realized how our God has captured so many things and made it “big” which the film director/ cinematographer failed to do so.. the climax fight is like children sword play.. but as usual our God shoulder’s the entire film 🙂
irquiz365 said:
Well said arun 🙂
Sridhar (@maya_twit) said:
பழசிராஜா – ஆதியூஷ சந்திய
irquiz365 said:
appada. finally you started coming. Super 🙂