Tags
@amas32, @balachidambara, @ikrishs, @i_vr, @Kaarthikarul, @maestrosworld, @Manivel, @muthiahrm, @Naanillai, @narendra, @nchokkan, @nom_d_plum, @Pramadth, @Qatarseenu, @ragavanpandian, @rajabalanm, @RaKaMaLi, @rmdeva, @sagittarian82, @SharanKay, @SivamAnbe, @sivaramang, @SoberAndDrunk, @StallionStorms, @Tparavai, @usharanims, @vrsaran
ஒரு காதலுனுக்கும், காதலிக்கும் உள்ள ஆசைகள் நூறுக்கும் மேற்பட்டது. காதலிக்கு வானத்தையே ஆடையாகப் போட ஆசை, மேகத்தையே மெத்தையாகப் போட ஆசைன்னு காதலன் சொல்றதில்லையா, அது மாதிரி. ஆனா இது கொஞ்சம் வேற மாதிரி ஆசைகள். இது ஒரு “பசுமையான”( 🙂 ) கிராமத்தில் இருக்கும் காதலனும் காதலியும் பாடும் பாட்டு. அந்த கிராமத்து பசுமையும், வாழை, பலா, மாமரங்கள் சூழ அமைதியான சூழலில் இருக்கும் இந்த காதலர்கள் இயற்கையோடு இணைந்து வாழ ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையைப் பாட்டாக பாடுகிறார்கள். எளிமையான ஆசைகள் 🙂
இந்தப் படம் பார்க்கவில்லை. (அந்த அளவுக்கு மன தைரிய்மில்லை 🙂 ) படமும் ஓடலை. ஆனா சில பாட்டுகள் ஹிட்டாச்சு. எனக்கு இதே ஆல்பத்தில் வரும் படத்தின் பேரைக் கொண்ட இன்னொரு பாட்டும் பிடிக்கும். ஆனா இன்னைக்கு பாட்டு டாப்பு. இப்படி ஒரு படத்துக்கு எதுக்கு இவ்வளவு சூப்பர் பாட்டு? அதுலயும் இன்னிக்கு கொடுத்திருக்கும் பாட்டின் துவக்க இசை ஒரு மினி சிம்பொனியேதான். பாடலை கண்டுபுடிச்சவுடன் கேட்டுப்பாருங்க. துவக்கஇசை மட்டுமல்ல, இந்த பாட்டின் இரண்டு இடையிசைகளும் சும்மா தூள்:-) ரெண்டிலும் ஷெனாய் புகுந்து விளையாடும். இங்கே இருப்பது முதல் இடையிசை, இதில் குழலோடு கூட்டணி போட்டு கலக்குது பாருங்க. ஷெனாயும் கேட்க, குழல் பதில் சொல்லன்னு இது ரெண்டுமே காதலன் காதலி போல பேசிக்குதுங்க 🙂 அதிலும் அந்த ஷெனாய் காதலன் கூப்பிட, குழல் காதலி வெட்கப்படுவதைக் கேளுங்க, அடடா அடடா அடடா:-)
இதே ஷெனாய் இரண்டாவது இடையிசையில் ட்ரம்ஸோடு கூட்டணி போட்டு கலக்கும். 🙂 இங்க கொடுக்கப்பட்டிருக்கும் துணுக்கு கொஞ்சநாள் முன்னாடி கூட இணைய உலகில் பிரபலமாச்சு. அதனால நிச்சயமா கண்டுபுடிக்க எளிதாத்தான் இருக்கும்.
Lifelife Clue : Please highlight the text between the quotes below to see the hidden text clue
Director of this film is father and father in law of other two tamil film directors 😉 🙂 🙂
Answer : Maamarathila Oonjal kattanum – Karisakkaatu poove (மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் – கரிசக்காட்டுப் பூவே)